×

நண்பர்களுடன் மது விருந்து 2வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி


தாம்பரம்: புதுபெருங்களத்தூர், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் அர்ஜூன் (36). இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர் வீட்டின் 2வது தளத்தின் மொட்டை மாடியில் 4 நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர், நண்பர்கள் மது அருந்திவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்றநிலையில், அர்ஜூன் மட்டும் போதையில் மாடியில் இருந்து நிலை தடுமாறி கிழே விழுந்துள்ளார். சத்தம்கேட்டு, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அர்ஜூனை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அர்ஜூன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த பீர்க்கன்காரணை போலீசார், அர்ஜூன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நண்பர்களுடன் மது விருந்து 2வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Arjun ,Bharathidasan Street, Puduperungalathur ,
× RELATED தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!!